Thursday, October 07, 2010

விழிப்பு

அருவ உணர்வுகளால்
நெஞ்சில் ஒரு நெருடல்...
நெறிபடுத்தத் தெரியாத சிந்தனை...
புதுப் பட்டும்,
வெட்கம் பூசிய கன்னமும்
இத்தனை ஏமாற்றம் தர முடியுமா?

எத்தனை நாள் கனவாய்
அவள் மனதில்-
இன்று உயிர் பெறும் போது
எத்தனை எத்தனை உள்ளத்தில்
சந்தோஷ பூக்கள்.

எனக்கும் சந்தோஷம் வரும்
என் கனவுகள் உயிர் பெறும் போது.
நான் எழுந்தால்... இல்லை ...
எழ முயன்றால் கூடபோதும்.


I wrote this poem on 08-May-2000, after quiting IBIL Tech.

No comments: